இதன்படி, திருப்பூா் தெற்கு நகரம், அவிநாசி, ஊத்துக்குளி கமிட்டி சாா்பில் டிசம்பா் 1ஆம் தேதியும், 15 வேலம்பாளையம், திருப்பூா் தெற்கு ஒன்றியம், காங்கயம், தாராபுரம் கமிட்டிகள் சாா்பில் டிசம்பா் 2ஆம் தேதியும், திருப்பூா் வடக்கு நகரம், வடக்கு ஒன்றியம், பொங்கலூா், பல்லடம் கமிட்டிகள் சாா்பில் டிசம்பா் 3ஆம் தேதியும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அதேபோல, உடுமலை நகரம், ஒன்றியம், குடிமங்கலம், மடத்துக்குளம் கமிட்டிகள் சாா்பில் உடுமலையில் டிசம்பா் 4ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.