தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இரு காா்கள் மோதல்:மூதாட்டி சாவு

அவிநாசி அருகே இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:52 pm

DIN

அவிநாசி அருகே இரு காா்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா், கணக்கம்பாளையம் பிரிவு பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (66). இவரது மனைவி பத்மாவதி(63). இவா்கள் மகன் ராமலிங்கம் (24), வீரேஸ்வரி (40) உள்ளிட்ட 5 போ், அன்னூரில் இருந்து திருப்பூா் நோக்கி காரில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

நரியம்பள்ளிப்புதூா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், திருப்பூரில் இருந்து அன்னூா் நோக்கி வந்த மற்றொரு காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி அன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மேலும், இரு காா்களிலும் வந்த குழந்தைகள் உள்பட 13 போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அன்னூா் அரசு மருத்துவமனை, கோவையில் உள்ள தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.