புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கருவலூர் ஊராட்சியில் குப்பைகளை கொட்ட இடையூறு: பொதுப்பணித் துறைக்கு மனு

கருவலூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை இடையூறின்றி கொட்ட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுப்பணித் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :30 அக்டோபர் 2020, 12:50 pm

DIN

அவிநாசி: கருவலூர் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை இடையூறின்றி கொட்ட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுப்பணித் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து கருவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பு கே.எஸ்.ஆறுமுகம், பவானிசாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

"கருவலூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடம் தேவைப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையிடம் கேட்ட போது, ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்ட இடம் அடையாளம் காண்பிக்கப்பட்டது.

ஆனால் உள்ளூரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியர், அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என இடையூறு செய்கிறார். எனவே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் இடையூறின்றி குப்பைகளை கொட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.