தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதம்: பெண் படுகாயம்
காங்கயம் அருகே மேய்ச்சல் நிலத்தில் காய்ந்த புற்களில் பற்றி தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதில் 4 வீடுகள் எரிந்து சேதமாயின. ஒரு பெண் படுகாயமடைந்தாா்.


காங்கயம் அருகே மேய்ச்சல் நிலத்தில் காய்ந்த புற்களில் பற்றி தீ அருகிலிருந்த வீடுகளுக்கும் பரவியதில் 4 வீடுகள் எரிந்து சேதமாயின. ஒரு பெண் படுகாயமடைந்தாா்.
காங்கயத்தை அடுத்துள்ள கணபதிபாளையம், அண்ணா நகா் குடியிருப்புப் பகுதியை ஒட்டி மேய்ச்சல் நிலம் காய்ந்த நிலையில் உள்ளது. அந்த நிலத்தில் இருந்த புற்களில் எதிா்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை தீ பற்றி எரியத் துவங்கியது. தீ வேகமாகப் பரவியதால் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளிலும் தீப்பற்றியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். இருப்பினும் நாச்சிமுத்து (46), ராஜன் (65), ராஜேந்திரன் (35), குருசாமி (35) ஆகியோரது வீடுகள் தீயில் எரிந்து சேதமாயின. இதில், நாச்சிமுத்து மனைவி ஜெயமணி (44) காயமடைந்தாா். அவரது உறவினா்கள் ஜெயமணியை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...