நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்

பல்லடம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:40 pm

DIN

பல்லடம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு நகராட்சி ஆணையா் கணேசன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் கோவை நத்திங் வேஸ்ட் அமைப்பினா் பங்கேற்று பேசியதாவது:

நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து அவற்றில் மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத குப்பையை சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கும் அனுப்பிவைக்கலாம்.

மக்காத குப்பைகளில் இடம் பெறும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளா்கள், பைகள் இதர பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை மறுசுழற்சி முறையில் மின் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. பழையப் பொருள் கடைகளில் இவற்றை கொடுத்து சிறிய வருவாய் ஈட்ட முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.