ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சேவூர் அருகே முதியவர் கொலை: இளைஞர் தலைமறைவு

சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவர் கொலை, தொடர்புடைய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 2:44 pm

DIN

சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவர் கொலை, தொடர்புடைய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே ராமியம்பாளையம் பால் கூட்டுறவு சங்கம் பகுதியில் தனியாக வசித்து வருபவர் ராமசாமி மகன் வெங்கடாசலம்(80). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ராசு மகுன் சந்தோஷ்(25).

இவர்களுக்குள் ஏற்கனவே நிலத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல ஏற்பட்ட தகாறில் மது போதையில் இருந்த சந்தோஷ் கட்டையால் தாக்கியதில் வெங்கடாசலம் உயிரிழந்தார்.

வெங்கடாசலம் உயிரிழந்ததை அறிந்த சந்தோஷ் அங்கிருந்து தலைமறைவானர். தகவலறிந்த சேவூர் போலீஸார், வெங்கடாசலத்தின் பிரேதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.