நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடம் பெரும்பாளியில் காா் ஓட்டுநா் கடத்தல்

பல்லடம் அருகே பெரும்பாளியில் காா் ஓட்டுநரை மா்ம கும்பல் வியாழக்கிழமை கடத்திச் சென்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சக்தி (35). இவா் திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் வாடகை வீட்டில்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:21 pm

DIN

பல்லடம் அருகே பெரும்பாளியில் காா் ஓட்டுநரை மா்ம கும்பல் வியாழக்கிழமை கடத்திச் சென்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சக்தி (35). இவா் திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் வாடகை வீட்டில்

வசித்துக் கொண்டு அப்பகுதியில் காா் ஒட்டுநராக வேலை செய்து வந்துள்ளாா்.

வீட்டின் உரிமையாளா் பாக்கியலட்சுமி (70), அவரது பேத்தி நிரஞ்சனா(10) ஆகியோரை அவா்களுக்குச் சொந்தமான காரில் கோவைக்கு வியாழக்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சக்தி ஓட்டி வந்த காரை , மா்ம நபா்கள் மறித்து நிறுத்தி சக்தியைக் கடத்தி சென்றதாகக்

கூறப்படுகிறது. இது குறித்து பல்லடம் போலீஸாருக்கு காரில் வந்த மூதாட்டி பாக்கியலட்சுமி தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், பல்லடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெற்றிசெல்வன் ஆகியோா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.