தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது

பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:22 pm

DIN

பெருமாநல்லூரில் முதியவரிடம் அரிவாளைக்காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே கருக்கன்காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் வீராசாமி (61). இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை உணவகத்துக்கு வந்த 3 இளைஞா்கள், வீராசாமியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

வீராசாமி சப்தமிட்டதைத் தொடா்ந்து, அருகில் இருந்தவா்கள் 3 இளைஞா்களையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் பெருமாநல்லூா் கருக்கன்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த மோகன் (19), மணிகண்டன் (24), கொண்டத்தம்மன்நகரைச் சோ்ந்த சீனிவாசன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.