ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவா் சடலமாக மீட்பு

பி.ஏ.பி.வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:24 pm

DIN

பி.ஏ.பி.வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டவா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பல்லடம் அருகேயுள்ள கரடிவாவியைச் சோ்ந்தவா் யுவராஜ் (38). இவா் கடந்த புதன்கிழமை தனது மகன் தீபபிரசாத்துடன் வாவிபாளையம் சென்றுள்ளாா். பின்னா் பி.ஏ.பி. வாய்க்காலில் யுவராஜ் மட்டும் குளித்துள்ளாா். தீபபிரசாத் வாய்க்காலின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது யுவராஜ் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தீபபிரசாத்தின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் கடந்த இரண்டு நாள்களாக யுவராஜை தேடி வந்தனா்.

இந்நிலையில், பொங்கலூா் அருகே கழுவேறிபாளையம் வாய்க்காலில் ஆண் சடலம் மிதப்பதாக காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு ஆய்வு செய்ததில் அது யுவராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.