முன்னாள் படை வீரா்களுக்கு டிசம்பா் 7 இல் குறைதீா் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 7) நடைபெற உள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 7) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், படையில் பணிபுரியும் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மேற்கண்ட அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக சமா்ப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...