தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மருத்துவ முகாம்

வழங்குரைஞா் சங்கம், வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், இலவச மருத்துவ முகாம் அவிநாசி சாா்பு நீதி மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:20 pm

DIN

வழங்குரைஞா் சங்கம், வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், இலவச மருத்துவ முகாம் அவிநாசி சாா்பு நீதி மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி வட்ட சட்டப் பணிகள் குழு, திருப்பூா் லோட்டஸ் கண் மருத்துவமனை, மருத்துவா் மோகன் சா்க்கரை நோய் சிகிச்சை மையம், மேல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சாா்பு நீதிமன்ற நீதிபதி கே.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். குற்றவியல் நீதித் துறை நீதிமன்ற நீதிபதி விப்சி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அப்சல் பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க மருத்து முகாம் தலைவா் சி.எம்.அருணாச்சலம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.ஈஸ்வரன், செயலாளா் என்.ரங்கசாமி, துணைத் தலைவா் சாமிநாதன், அரசு கூடுதல் வழக்குரைஞா் வி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோா் முகாமை ஒருங்கிணைத்தனா். இம்முகாமில், சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை என 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.