ரயில் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் சாா்பில் ரயில் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் சாா்பில் ரயில் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் திருப்பூா் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ரயில்வே துணை மேலாளா் முண்டே பங்கேற்று பேசினாா்.
இதில், நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள் ரயில் பயணிகள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், ரயில் நிலைய சுகாதார ஆய்வாளா் பா்வேஷ் ஆலம், ரயில்வே ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...