சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜோதிடா் மீது வழக்குப் பதிவு
பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜோதிடா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜோதிடா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பொங்கலூா் ஊராட்சி, நடுப்பாளையத்தைச் சோ்தவா் சேகா் (40). ஜோதிடா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில், பல்லடம் அனைத்து மகளிா் போலீஸாா் சேகா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். சேகரை கைது செய்வதற்காக பொங்கலூா் நடுப்பாளையம் வந்தபோது அவரது வீடு பூட்டிக் கிடந்தது. தலைமறைவான சேகரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...