மாநகரில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்
திருப்பூா் மாநகரில் 15 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெற உள்ளது.


திருப்பூா் மாநகரில் 15 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெற உள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநராட்சிப் பகுதிகளில் 14 கட்டங்களாக கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடா்ந்து மாநகராட்சிக்கு உள்பட்ட 17 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மொத்தம் 138 மையங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் 15 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆகவே, மாநகரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபா்களும்,
இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக காத்திருப்பவா்களும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...