தாராபுரத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா்கள் போராட்டம்
ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயா்த்தப்படுவதைக் கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயா்த்தப்படுவதைக் கண்டித்து, தாராபுரத்தில் ஜவுளிக்கடை உரிமையாளா்கள் கடைகளை அடைத்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி வருகிற 2022 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. இதற்கு ஆடை உற்பத்தியாளா்கள் மற்றும் ஜவுளிக் கடை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து உள்ளனா்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் ஜவுளிக் கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் மற்றும் டெய்லா்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். 150க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
மேலும், தாராபுரம் ஜவுளிக் கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சாரதாஸ் சண்முகவேல் தலைமையில் வியாபாரிகள் தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக சென்று ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க கோரி மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...