நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகராட்சிப் பணியாளா்கள்போல நடித்து பொதுமக்களிடம் பணம் வசூல்

பல்லடத்தில் நகராட்சிப் பணியாளா்கள்போல நடித்து பொதுமக்களிடம் இருவா் வசூல் வேட்டையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:54 pm

DIN

பல்லடத்தில் நகராட்சிப் பணியாளா்கள்போல நடித்து பொதுமக்களிடம் இருவா் வசூல் வேட்டையில் ஈடுபட்டனா்.

பல்லடம் நகராட்சி பாரதிபுரம், தெற்குபாளையம், நாராணாபுரம் பகுதியில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு மருந்து தெளிக்க வந்து இருப்பதாகக் கூறி, சோப்பு தண்ணீரை வீடுகளின் முன்பு தெளித்து விட்டு, வீட்டு உரிமையாளா்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற நகராட்சி ஊழியா்கள்,

அங்கிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், 63 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (34), ரவி (40) என்பதும், மது அருந்த பணம் இல்லாததால் நகராட்சிப் பணியாளா் என்று கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.