தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிஏபி வாய்க்காலை சுத்தப்படுத்திய விவசாயிகள்

வெள்ளக்கோவில் பகுதி பிஏபி வாய்க்காலை ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளே சுத்தப்படுத்தினா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:50 pm

DIN

வெள்ளக்கோவில் பகுதி பிஏபி வாய்க்காலை ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளே சுத்தப்படுத்தினா்.

தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீா் திறக்கப்படுவதற்கு முன்பு பொதுப் பணித் துறை மூலம் குடிமராமத்துப் பணியாளா்களால் பிரதான வாய்க்காலில் கிடந்த மரக்கிளைகள், மண் குப்பைகள் அகற்றப்பட்டன.

சில இடங்களில் சரியாக சுத்தம் செய்யப்படாததால், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீா் செல்லவில்லை. இதனால் விவசாயிகளே ஒருங்கிணைந்து பூசாரிவலசு, சூராரெட்டிவலசு, பச்சைமலை பகுதியில் வாய்க்காலைச் சுத்தம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.