ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

6ஆவது நாளாக சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 145 போ் கைது

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 145 பேரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:51 pm

DIN

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 145 பேரைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக அரசு ஊழியா்கள் சாா்பில் 6ஆவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 145 பேரைத் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.