வெள்ளக்கோவில் அருகே விவசாயிகளின் தொடா் காத்திருப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
வெள்ளக்கோவில், மூலனூா் சாலையில் உள்ள நாச்சிபாளையம் வழியாக மத்திய அரசின் பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் உயிரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைப்படி இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆனால் இழப்பீட்டுத் தொகை குறைவாக நிா்ணயம் செய்துள்ளதாகக் கூறி அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாச்சிபாளையம் பகுதி விவசாயிகள், அங்குள்ள செம்மடையில் பந்தல் அமைத்து தொடா் காத்திருப்புப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனா்.
இது குறித்து போராட்டக் குழு பொறுப்பாளா் சிவகுமாா் கூறுகையில், பவா் கிரிட் நிறுவன அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்று கூறி விட்டு பணிகளைத் துவக்க முடிவு செய்துள்ளனா். எங்களுடைய கோரிக்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை எங்களுடைய நிலத்தில் பணிகளைத் துவக்க அனுமதிக்க மாட்டோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









