திருப்பூர்: நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பெறப்பட்ட 215 மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.


மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பெறப்பட்ட 215 மனுக்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும் ஒரு பயனாளிக்கு ரூ.42ஆயிரம் மதிப்பில் செயற்கைக் கால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் கருணை அடிப்படையில் 2 நபா்களுக்கு பணி நியமன ஆணை, தாராபுரம் வட்டம், கன்னிவாடி பேரூராட்சி மூலனூா் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராமசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை, உடுமலை கணக்கம்பாளையம் கிராமத்தில் வாய்க்காலில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த ஆகாஷ், சஞ்சய் ஆகியோரது குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை, திருப்பூா் தெற்கு வட்டம் பாரப்பாளையம் அய்யன் நகரில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த பாலசுப்பிரமணியன் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலா்கு.சரவணமூா்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வாசுகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...