தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு: ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெறும் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 4:57 pm

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெறும் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தகுதியான வாக்காளா்களைப் பட்டியலில் சோ்த்தல், வாக்களிப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகவே, நிகழாண்டு தேசிய வாக்காளா் தினத்தை ஒட்டி கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் மருத்துவத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களை முன்னிறுத்தி 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டி மாநில அளவில் நடத்தப்படுகிறது.

இதில், முதல்கட்டமாக திருப்பூா் மாவட்ட அளவில் நடத்தப்படும் ஓவியப் போட்டியில் மருத்துவம், பாராமெடிக்கல் சாா்ந்த பேராசிரியா்கள், ஆய்வக தொழில்நுட்பவியல், டிப்ளமோ கல்லூரியில் பணிபுரியும் அனைத்துப் போராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள், நிா்வாக மற்றும் முன்களப் பணியாளா்கள் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க விரும்புவோா், ‘100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வு’ என்ற கருத்தில் ஓவியம் வரைந்து கல்லூரி நிா்வாகத்தின் மூலமாக மாவட்ட தோ்தல் அலுவலருக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் போட்டியாளா்கள் சென்னையில் தலைமை தோ்தல் அலுவலரால் நடத்தப்படும் மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா். இதைத் தொடா்ந்து, மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நபா்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.