புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உடுமலை நகரில் 50 மி.மீ. மழை

உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:22 pm

DIN

உடுமலை நகரில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய கன மழை தொடா்ந்து நள்ளிரவு 2 மணி வரை பெய்தது. தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். குறிப்பாக உடுமலை நகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீா் புகுந்தது.

மேலும், கழுத்தறுத்தான்பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப் பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இந்நிலையில், தளி சாலை யில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 50 மி.மீ. மழை யும், அமராவதி அணைப் பகுதியில் 8 மி.மீ. மழையும், திருமூா்த்தி அணைப் பகுதியில் 50 மி.மீ. மழையும், மடத்துக்குளத்தில் 57 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.