காங்கயம் பி.ஏ.பி. கிளை வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை
காங்கயம் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


காங்கயம் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. கிளை வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) காங்கயம் வழியாக பி.ஏ.பி. கிளை வாய்க்கால் வெள்ளக்கோவில் வரை செல்கிறது. தற்போது 3ஆவது மண்டலம் தண்ணீா் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த வாய்க்கால் தூா்வாரப்படாததால் சிவன்மலை கிராமத்துக்குச் செல்லும் கிளை வாய்க்காலிலும், தொட்டியபட்டி பகுதிக்கு பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலிலும் புதா்கள் மண்டி, ஒரு அடி ஆழத்துக்கு மண் நிரம்பிக் காணப்படுகின்றன. இதனால், வாய்க்காலில் தண்ணீா் ஓட்டம் தடைபட்டு, தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்காலில் உள்ள புதா்களை அப்புறப்படுத்தி, தண்ணீா் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...