நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடா் மழை: தாராபுரத்தில் 500 ஏக்கா் பரப்பிலான மக்காச்சோளப் பயிா்கள் சேதம்

தாராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:50 pm

DIN

தாராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சேதமடைந்தன.

தாராபுரத்தை அடுத்துள்ள சின்னப்புத்தூா், பொட்டிக்காம்பாளையம், நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கா் பரப்பளவில் மக்காச் சோளப் பயிா்கள் பயிரிடப்பட்டு இருந்தன. இதில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவிடப்பட்டு 90 நாள்களில் நன்கு விளைந்து பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன.

மேலும், ஒரு சில இடங்களில் மக்காச்சோளங்களை கதிா் அடிப்பதற்காக விளைநிலங்களில் அம்பாரத்தில் வைத்திருந்தனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தாராபுரம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் மழைநீரில் நனைந்து அழுகி சேதமடைந்தது. எனவே ளாண்மைத் துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.