ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அவிநாசி ஒன்றியக்குழு கூட்டம்:சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு

அவிநாசியில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:05 pm

DIN

அவிநாசியில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் அரிஹரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பங்கேற்ற உறுப்பினா்கள் விவாதம்:

காா்த்தி (சுயேச்சை): 15 நாள்களுக்கு முன் பழங்கரை ஊராட்சில் குடிநீா் பிரச்னை குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் அரிஹரனிடம் பொதுமக்கள் தெரிவித்தனா். அப்போது அவா், பொதுமக்களிடம் ஒன்றியக் குழு உறுப்பினா் என்று கூட பாராமல் உரிய மரியாதையின்றி பேசியுள்ளாா். இதனை கண்டித்து கூட்டத்தை புறக்கணிகிறேன் எனக் கூறி வெளிநடப்பு செய்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் அரிஹரன்: அனைவருக்கும் மரியாதை தரக் கூடியவன் நான். மரியாதையுடன்தான் பேசினேன். தவறாக சொல்லாதீா்.

முத்துசாமி (மாா்க்சிஸ்ட்): கணியாம்பூண்டி பகுதியில், பட்டா பூமியில் கழிவுநீா் விடப்படுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

சேதுமாதவன் (திமுக ): அம்பாள் காலனி, வெற்றி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை செய்து 6 மாதங்களாகியும் இன்னும் பணி தொடங்கவில்லை. அதேபோல லட்சுமி லே-அவுட் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை செய்து பல நாள்களாகியும் இன்னும் பணி தொடங்கவில்லை. இப்பணிகளை விரைவில் தொடங்கி, முடிக்க வேண்டும்.

பழங்கரை பகுதியில் இடிந்த கட்டடத்தில் செயல்படும் தபால் நிலையம், நூலகம் ஆகியவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கொளத்துப்பாளையம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

முடிவில், ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் பேசுகையில், ‘ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா். இதையடுத்து மன்றப் பொருள் வாசிக்கப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.