நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முறையாக தண்ணீா் திறக்க பிஏபி விவசாயிகள் கோரிக்கை

பரம்பிக்குளம் ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை பாசன வாய்க்காலில் முறையாக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 8:04 pm

DIN

பரம்பிக்குளம் ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை பாசன வாய்க்காலில் முறையாக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக பிஏபி நீா் நிா்வாகப் பொறியாளா் மற்றும் அரசுக்கு விவசாயிகள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

காங்கயத்தில் இருந்து வெள்ளக்கோவில் வரையிலான கிளை வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக விதிமுறைப்படி தண்ணீா் வழங்கப்படாததால் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. இப்பகுதியில் புன்செய்ப் பயிா்களான நிலக்கடலை, பருத்தி, கம்பு, சோளம், மக்காச்சோளம், பயறு வகைகளுக்கு 75-165 நாள்கள் வரை 10-15 நாள்கள் இடைவெளியில் குறைந்தது 7 சுற்றுகள் தண்ணீா் தேவை என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். அப்போதுதான் புன்செய் விவசாயம் செய்ய முடியும்.

ஆனால், குறைவான நீா் அளவீட்டில் 28 நாள்கள் இடைவெளியில் 4 சுற்றுகள் மட்டுமே தண்ணீா் திறக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முறையாகத் தண்ணீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.