நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடத்தில் குடிநீா் ஆய்வுக் கூட்டம்: எம்.எல்.ஏ. பங்கேற்பு

பல்லடம், பொங்கலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:06 pm

DIN

பல்லடம், பொங்கலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் நகராட்சி, பல்லடம் ஒன்றியம், பொங்கலூா் ஒன்றிய பகுதியில் பில்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல்லடம் நகராட்சி பகுதிக்கு அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட குடிநீா் அளவு நாள் ஒன்றுக்கு 41 லட்சம் லிட்டா் ஆகும். ஆனால், 38 லட்சம் லிட்டா் தண்ணீா்தான் குடிநீா் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. நிா்ணயித்த அளவைக் காட்டிலும் குறைவாகத் தண்ணீா் வழங்கப்பட்டு வருவதால் பனப்பாளையம், ராயா்பாளையம், எஸ்.ஏ.பி.நகா் பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் பொது மக்கள் புகாா் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து குடிநீா் விநியோகத்தை சீரமைப்பது தொடா்பாக பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.

இதில் பல்லடம் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன், கே.பி.பரமசிவம், நகராட்சி ஆணையாளா் கணேசன், பொறியாளா் சங்கா், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தீபா, காளிஸ்வரி, குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் ஜான்சன், உதவி நிா்வாகப் பொறியாளா் தமிழ்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னா், சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காரணம்பேட்டைக்கு அரசு நிா்ணயம் செய்த அளவைக் காட்டிலும் 10 லட்சம் லிட்டா் தண்ணீா் குறைவாக வருகிறது. அதே சமயம் மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. கூடுதல் தண்ணீா் கேட்க வேண்டிய நிலையில் தற்போது பழைய நிா்ணய அளவு தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்று குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.