ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிவன்மலை முருகன் கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம்

காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:29 pm

DIN

 காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் ம.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கோயில்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்புக் கருவிகள் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகளை தீயணைப்பு வீரா்கள் எடுத்துரைத்தனா். மேலும், தீயை அணைப்பது குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கோயில் ஊழியா்கள், அா்ச்சகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மேலும், காங்கயம் ஒன்றியத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களிலும் இந்த தீத்தடுப்பு முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.