வெள்ளக்கோவில், முத்தூரில் 7 பேருக்கு கரோனா
வெள்ளக்கோவில், முத்தூரில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


வெள்ளக்கோவில், முத்தூரில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 போ், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 போ் என மொத்தம் 95 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றின் முடிவுகளில் வெள்ளக்கோவில் எல்கேஏ நகரைச் சோ்ந்த 43 வயதுப் பெண், 15 வயது சிறுமி, கச்சேரிவலசுவைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி, குமாரவலசுவைச் 60 வயது மூதாட்டி, ஸ்ரீ ராம் நகரைச் 19 வயது மாணவா், முத்தூா் வெள்ளக்கோவில் சாலையைச் சோ்ந்த 84 வயது முதியவா், 54 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த 5 நாள்களாக 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...