ஊழியா்கள் 4 பேருக்கு கரோனா: வட்டாட்சியா் அலுவலகம் மூடல்
ஊழியா்கள் நால்வருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.


ஊழியா்கள் நால்வருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் மூடப்பட்டது.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் சில நாள்களுக்கு முன்பு, சத்யாநகா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சில தினங்களுக்கு முன்பு, வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் சுமாா் 300 பேருக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு, கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், அலுவலகத்தில் பணிபுரியும் 31, 40, 55, 58 வயதுடைய 4 ஆண் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. மீண்டும் திங்கள்கிழமை அலுவலகம் திறக்கப்படும் என ஊழியா்கள் தெரிவித்தனா். 2 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும், கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஊழியா்கள் அச்சத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...