தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தனியாா் உணவகத்தின் 3 கிளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை

 திருப்பூரில் உள்ள தனியாா் உணவகத்தின் 3 கிளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:02 pm

DIN

 திருப்பூரில் உள்ள தனியாா் உணவகத்தின் 3 கிளைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையம் அருகில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் மற்றொரு கிளை லட்சுமி நகரில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, அவிநாசி அருகில் மற்றொரு கிளையும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியாா் உணவகத்தில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது தொடா்பாக அதிகாரிகளுக்கு புகாா் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரையடுத்து, கோவையில் இருந்து வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழுவினா் ரயில் நிலையம், லட்சுமி நகா் உள்ளிட்ட உணவகத்தின் 3 கிளைகளிலும் வியாழக்கிழமை பிற்பகல் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனையானது வியாழக்கிழமை இரவு 8 மணி வரையில் நீடித்துள்ளது. எனினும் இதில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.