தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

 திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:06 pm

DIN

 திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாமில் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட பின்னா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களின் வளா்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முருகம்பாளையம், இடுவம்பாளையம், கோயில்வழி, செட்டிபாளையம், திருகுமரன் நகா், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாமில், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.