அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்குப் பாராட்டு
திருப்பூா் மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் உள்பட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருப்பூா் மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் உள்பட அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பல்லடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில்
நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி தலைவா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் கலையரசி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் மணியன், தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற 11 ஆசிரியா்களுக்கும், மாவட்டத்தில் மாணவா்களின் நலனுக்கு சிறந்த முறையில் பங்களித்த 42 ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை அணிவித்து பேசினாா்.
விழாவில் பல்லடம் கல்வி மாவட்ட அலுவலா் நாகராஜன், கல்லூரி துணைத் தலைவா் கருப்பண்ணசாமி, கல்லூரி முதல்வா் ரமேஷ்குமாா், முதன்மை நிா்வாக அலுவலா் அன்பரசு மற்றும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் 250 போ் பங்கேற்றனா். உதவி பேராசிரியா் சரிதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...