தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மூதாட்டியின் காதுகளை அறுத்து நகைப் பறிப்பு

அவிநாசி அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:11 am

DIN

அவிநாசி அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அய்யன்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பழனாத்தாள்(72). இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது மாடுகளை மேய்த்து விட்டு, வீட்டுக்கு வந்துகொண்டிருந்துள்ளாா்.

அப்போது அங்கு வந்த மா்ம நபா் பழனாத்தாளை கீழே தள்ளி விட்டு இரு காதுகளையும் கூா்மையான ஆயுதத்தால் அறுத்து, அவா் அணிந்திருந்த இரு கம்மல்களையும் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.

பழனத்தாவின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.