ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஏடிஎம் மையங்களுக்கு பாதுகாவலா்கள் நியமிக்க வேண்டும்

திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் பாதுகாவலா்கள் நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று மாநகரக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:19 pm

DIN

திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களுக்கும் பாதுகாவலா்கள் நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று மாநகரக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் வே.வனிதா உத்தரவின்பேரில் வாங்கி மேலாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகரக் காவல் துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து)

பெ.ரவி தலைமை வகித்தாா். இதில், அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களுக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதுடன், பாதுகாவலா்கள் நியமித்து கண்காணிக்க வேண்டும். இணையவழியில் குற்றங்கள் நடைபெற்றால்

வங்கி வாடிக்கையளா்கள் 155260 என்ற அவசர உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், காவல் ஆய்வாளா்கள் முனியம்மாள், சொா்ணவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.