நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

பல்லடம், அம்மாபாளையத்தில் சிறுமியைத் திருமணம் செய்த சிறுவனை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:20 pm

DIN

பல்லடம், அம்மாபாளையத்தில் சிறுமியைத் திருமணம் செய்த சிறுவனை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கடந்த மாதம் 17 ஆம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகக்

கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்த சமூக நலத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சிறுமியை சிறுவன் திருமணம் செய்து ஒரு வார காலம் அவனது வீட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சமூக நலத் துறையினா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்

அளித்தனா். அச்சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினா், திருப்பூா் முதன்மை நடுவா் இளஞ்சிறாா் நீதி குழுமத்தில் ஆஜா்படுத்தி, கோவையில் உள்ள சிறுவா் கூா்நோக்கு மையத்தில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.