அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு கரோனா நிதியுதவி

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோா்களை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் கரோனா நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:24 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோா்களை இழந்த 9 குழந்தைகளுக்கு ரூ.45 லட்சம் கரோனா நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி கரோனா நோய்த் தொற்றால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு

ரூ.5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் கரோனா நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதேபோல, பெற்றோா்களை இழந்து உறவினா்களின் பராமரிப்பில் வாழும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்

வீதம் 18 வயது நிறவடையும் வரையில் கரோனா நிதியுதவி வழங்கவும், அரசு இல்லங்களில் முன்னுரிமை, கல்வி மற்றும் விடுதி செலவுகள் பட்டப் படிப்பு முடித்து வரும் வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பெற்றோரை இழந்துள்ள 9 குழந்தைகளுக்கு ரூ. 45 லட்சம் கரோனா நிதியுதவியை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வழங்கினாா். இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம.செல்வம், நன்னடத்தை அலுவலா் து.நித்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.