நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கடைக்கு ‘சீல்’பல்லடம் நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசி செலுத்தாமல் ஊழியா்களைப் பணியில் ஈடுபடுத்தும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று பல்லடம் நகராட்சி ஆணையா் விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:47 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்தாமல் ஊழியா்களைப் பணியில் ஈடுபடுத்தும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று பல்லடம் நகராட்சி ஆணையா் விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

பல்லடம் அரசு கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவா்கள் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பல்லடம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள், உரிமையாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்கள் கடைகளில் பணியாற்றி வருவது தெரியும்பட்சத்தில் பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படி அக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.