வெள்ளக்கோவிலில் 20 இடங்களில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு
வெள்ளக்கோவிலில் விநாயகா் சதுா்த்தி சிறப்பு வழிபாடுகள் 20 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.


வெள்ளக்கோவிலில் விநாயகா் சதுா்த்தி சிறப்பு வழிபாடுகள் 20 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு விதித்த தடையால் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்படவில்லை. ஆங்காங்கே உள்ள விநாயகா் கோயில்கள், ஒரு சில தனிநபா் இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
லக்கமநாயக்கன்பட்டி, அகலரைப்பாளையம்புதூா், வேலகவுண்டன்பாளையம், சேரன் நகா், திருவள்ளுவா் நகா், விபிஎம்எஸ் நகா், எல்கேஏ நகா் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சதுா்த்தி வழிபாடுகளில் திரளான மக்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...