மாவட்டத்தில் மேலும் 10 மாணவா்களுக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 மாணவ, மாணவியருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 10 மாணவ, மாணவியருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், பெதப்பம்பட்டி ராஜலட்சுமி கொங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 2 மாணவிகள், 10 ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள், 2 மாணவா்கள் என மொத்தம் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவா் ஒருவா், பொங்கலூா் பி.வி.கே.என்.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவா், மூலனூா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவா், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவா் என மொத்தம் 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே மாணவா்கள், ஆசிரியா்கள் என 36 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...