தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்ட கழிவு மூட்டைகள்

வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கழிவு மூட்டைகள் வீசப்பட்டுள்ளது குறித்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:31 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கழிவு மூட்டைகள் வீசப்பட்டுள்ளது குறித்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் வழியாக நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

இந்த சாலை கோவை, கரூா், திருச்சி, தஞ்சாவூா் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது. இந்தச் சாலையில், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டட கழிவுகள் அடங்கிய 300 க்கும் மேற்பட்ட கழிவு மூட்டைகளை மா்ம நபா்கள் இரவு நேரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.

கழிவுகளை உண்ண வரும் நாய்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கழிவுகளை கொட்டிச் செல்லும் மா்ம நபா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.