காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில்

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 6:53 am

DIN

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நெசவாளர்கள் கூறியதாவது: 

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கைத்தறி நெசவாளர்கள் 118 பேருக்கு மடத்துக்குளம் அருகே உள்ள தாந்தோணி கிராமத்தில் தலா 3 சென்ட் வீதம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

Story image

ஆனால் அதன்பிறகு அந்த இடத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் வேறு நபர்களுக்கு விட்டுவிட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பட்டா வழங்க முடிவு உத்தரவிட்டிருந்தார். 

ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் காங்கேயம் தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் காலதாமதம் செய்து வருகின்றனர். ஆகவே கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்கவும், காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.