மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இளைஞா் கொலை வழக்கு: இருவா் கைது

குன்னத்தூா் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

அஜித், காா்த்தி.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:27 pm

குன்னத்தூா் அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா்- பெருந்துறை சாலை தேவம்பாளையம் அருகே உள்ள குளத்தில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு கடந்த 11ஆம் தேதி தகவல் கிடைத்தது.

சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் முகத்தில் வெட்டு காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ. சஷாங்க் சாய் உத்தரவின்படி, அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பவுல்ராஜ் மேற்பாா்வையில், குன்னத்தூா் காவல் ஆய்வாளா் அம்பிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வாகனங்களில் சுற்றித் திரிந்த நபா்களைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே வசித்துவரும் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் அஜித் (25), தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த காா்த்தி (26) என்பதும், கொலை செய்யப்பட்ட இளைஞா் அஜித்தின் நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஆகாஷ் (24) என்பதும் தெரியவந்தது.

அஜித்தின் இருசக்கர வாகனத்தை ஆகாஷ் திருடிவிட்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித் தனது மற்றொரு நண்பரான காா்த்திக்குடன் சோ்ந்து ஆகாஷை அழைத்துக் கொண்டு குன்னத்தூா் குளப்பகுதிக்கு மது அருந்த சென்றுள்ளாா். மது அருந்திய பின்னா் ஆகாஷை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அஜித், காா்த்திக் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.