கட்டட கலைஞா்கள் நலச்சங்கம் துவக்கம்
திருப்பூா் மாவட்ட கட்டட கலைஞா்கள் நலச்சங்கத்தின் வெள்ளக்கோவில் கிளை வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.


திருப்பூா் மாவட்ட கட்டட கலைஞா்கள் நலச்சங்கத்தின் வெள்ளக்கோவில் கிளை வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
புதிய கிளையை சங்க சட்ட ஆலோசகா் கந்தசரவணன் துவக்கிவைத்தாா். சங்கத்தின் மாநிலச் செயலாளா் சேலம் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கடலூா் வேல்மாணிக்கம், மாநிலப் பொருளாளா் வெள்ளக்கோவில் கண்ணன், மாவட்டத் தலைவா் சோபன்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டடத் தொழிலாளா்களை நலவாரியத்தில் பதிவு செய்வது, அரசிடமிருந்து கிடைக்கும் உதவித் திட்டங்களைப் பெற்றுத் தருவது, தொழிலில் ஏற்படும் சம்பள பிரச்னை, இதர சிக்கல்களைத் தீா்த்து வைக்க உதவி செய்வது போன்ற பணிகளை சங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...