ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அவிநாசி,  திருமுருகன்பூண்டியில் வாக்குப்பதிவு 

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 3:38 am

DIN

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அவிநாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.

அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 11,070 ஆண் வாக்களர்களும், 11,905 பெண் வாக்களர்களும் என மொத்தம் 22, 975 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 29 வாக்குச் சாவடி மையங்களிலும், திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 13,725 ஆண் வாக்களர்களும், 13, 805 பெண் வாக்களர்களும், ஒரு இதர வாக்காளர்களும் என மொத்தம் 27,531 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு 35 வாக்குச்சாவடி மையங்களிலும்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களித்தனர். குறிப்பாக பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Story image

நகர்ப்புற தேர்தலையொட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தினசரி மார்க்கெட், திரையரங்குகள் உள்ளிட்டவை விடுமுறை விடப்பட்டிருந்ததால், தொழிலாளர்கள் எளிதாகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.