தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவல் ஆய்வாளா், 2 காவலா்களுக்கு கரோனா

 திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் மற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளா் மற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சுமாா் 50 வயதுயுடைய காவல் ஆய்வாளா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 34, 40 வயதுடைய இரு காவலா்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைத்து காவலா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். 

அதிகரிக்கும் கரோனா:

திருப்பூா் மாவட்டத்தில் நாள்தோறும் 50 நபா்களுக்கும் மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் பொது வெளியில் நடமாடும் நபா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.