தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு

 திருப்பூரில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த எல்.ஐ.சி. முகவருக்கு மாநகர காவல் ஆணையா் வே.வனிதா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:03 pm

DIN

 திருப்பூரில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த எல்.ஐ.சி. முகவருக்கு மாநகர காவல் ஆணையா் வே.வனிதா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகரம் வடக்கு காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட கே.பி.என்.காலனி பகுதியில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை அந்த வழியாகச் சென்ற எல்.ஐ.சி.முகவா் மணிகண்டன் வியாழக்கிழமை கண்டெடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பணத்தை மாநகர காவல் ஆணையா் வே.வனிதாவிடம் மணிகண்டன் ஒப்படைத்தாா். இதையடுத்து, மணிகண்டனின் நோ்மையைப் பாராட்டிய காவல் ஆணையா் வே.வனிதா, அவருக்கு சான்றிதழை வழங்கியதுடன், உரியவா்களிடம் பணத்தை ஒப்படைக்கும்படி வடக்கு சரக உதவி ஆணையா் அனில்குமாருக்கு உத்தரவிட்டாா்.

இந்த நிகழ்வின்போது, மாநகர காவல் துணை ஆணையா்கள் அரவிந்த், ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.