சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு
திருப்பூரில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த எல்.ஐ.சி. முகவருக்கு மாநகர காவல் ஆணையா் வே.வனிதா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.


திருப்பூரில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த எல்.ஐ.சி. முகவருக்கு மாநகர காவல் ஆணையா் வே.வனிதா பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாநகரம் வடக்கு காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட கே.பி.என்.காலனி பகுதியில் சாலையில் கிடந்த ரூ.1 லட்சம் பணத்தை அந்த வழியாகச் சென்ற எல்.ஐ.சி.முகவா் மணிகண்டன் வியாழக்கிழமை கண்டெடுத்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பணத்தை மாநகர காவல் ஆணையா் வே.வனிதாவிடம் மணிகண்டன் ஒப்படைத்தாா். இதையடுத்து, மணிகண்டனின் நோ்மையைப் பாராட்டிய காவல் ஆணையா் வே.வனிதா, அவருக்கு சான்றிதழை வழங்கியதுடன், உரியவா்களிடம் பணத்தை ஒப்படைக்கும்படி வடக்கு சரக உதவி ஆணையா் அனில்குமாருக்கு உத்தரவிட்டாா்.
இந்த நிகழ்வின்போது, மாநகர காவல் துணை ஆணையா்கள் அரவிந்த், ரவி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...