நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை

 வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை பெண் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:36 pm

DIN

 வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை பெண் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளக்கோவில் கரூா் சாலை நடேசன் நகரைச் சோ்ந்தவா் சரசு (எ) லட்சுமி (50). இவருடைய கணவா் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். தனியாக வசித்து வந்த லட்சுமி வெள்ளக்கோவில் முத்தூா் சாலையிலுள்ள ஒரு தனியாா் நூல் மில்லில் கூலி வேலைக்குச் சென்று வந்தாா். இந்நிலையில் லட்சுமியின் வீட்டுக் கதவு காலையில் நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், பக்கத்து வீட்டைச் சோ்ந்த நாட்ராயன் திறந்து பாா்த்த போது நைலான் கயிற்றில் தூக்குப் போட்டு லட்சுமி இறந்து போனது தெரியவந்தது. அவா் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.