தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,01,784 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:39 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,01,784 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 2,479 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 206 போ் வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 98,275 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,030 ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து அதிகரித்து வரும் தொற்று: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் , திருப்பூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 667 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பொது வெளியில் நடமாடும் போது கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.