ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்

தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

News image

தாராபுரம் பெரியகடை வீதி முன்பாக சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Updated On :9 ஜூலை 2022, 4:56 pm IST

திருப்பூர்: தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசிலை, சுங்கம், பொள்ளாச்சி சாலை சந்திப்பு, சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், கடைகளில் பொருள்கள், விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்ததால் சாலை விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அண்ணாசிலை முதல் சங்கம் வரையில் ஆக்கிரமிப்புகளை கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல் அகற்றி வருகின்றனர். மேலும், பாதாளச் சாக்கடை கால்வாய் அமைக்கவும் கடைகளின் முன்பாக குழிகள் வெட்டப்பட்டிருந்தது. இதனால் கடந்த 3 நாள்களாக போதிய அளவு வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் பெரியகடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ராமர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரிகளின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.